For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தீவிரவாதத்தை ஒடுக்க பிறநாடுகளுடன் கூட்டுமுயற்சியில் இறங்குகிறது இந்தியா

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:

சர்வதேச அளவில் நடக்கும் தீவிரவாதத்தைக் தடுக்கும் வகையில் இஸ்ரேல், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபடஇந்தியா தீர்மானித்துள்ளதாக உள்துறை அமைச்சர் அத்வானி தெரிவித்தார்.

இது செயல்படும் விதம் குறித்து அக்குழுவில் இடம்பெறும் அதிகாரிகள் கூடி முடிவெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார். இஸ்ரேலில் தனது 10நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இஸ்ரேல், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளும், இந்தியாவுடன் சேர்ந்து தொழில்நுட்பத் துறை, மற்றும் உளவுப் பிரிவு ஆகிய அனைத்திலும்ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளன.

இந்தியாவுடன் பிரான்ஸ் இணைந்து தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

இஸ்ரேல், ரஷ்யா ஆகிய நாடுகள் இதே போன்று சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவது மிகப்பெரியவெற்றியைத் தரும் என்று கூறியுள்ளன என்றார் அத்வானி.

தனது சுற்றுப்பயணத்தின் போது அவர் பாலஸ்தீனதில் உள்ள காஸாவுக்குச் சென்று பாலஸ்தீன பிரதமர் யாசர் அராஃபத்தையும் சந்தித்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X