அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
சென்னையில் பிரதமர் திறந்து வைக்கும் பிரம்மாண்ட தொழில்நுட்ப பூங்கா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னை தரமணியில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தொழில்நுட்பப் பூங்காவை வரும் ஜூலை 4 ம் தேதி பிரதமர் வாஜ்பாய் திறந்துவைக்கிறார்.
தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழக (டிட்கோ) சேர்மன் மற்றும் பொதுமேலாளர் கோபால் நிருபர்களிடம் கூறுகையில், சென்னை தரமணியில் 338 கோடிரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது இந்த தொழில்நுட்ப பூங்கா.
இதற்கான திறப்பு விழா வரும் ஜூலை 4 ம் தேதி நடக்கிறது. இதை பிரதமர் வாஜ்பாய் திறந்து வைக்கிறார். தமிழக முதல்வர் கருணாநிதி இதில் கலந்துகொள்கிறார். 15 ஏக்கர் நிலத்தில் 1.28 மில்லியன் சதுர அடியில் இந்த பூங்கா கட்டப்பட்டுள்ளது.
முதல்மாடியில் வங்கிகள், கடைகள், ஹோட்டல்கள், கலையரங்கம், வணிக மையங்கள் போன்றவை இருக்கும். இரண்டாம் மாடியில் அலுவலகம்இயங்கும். கலிபோர்னியா சொலியூஷன், டாடா கன்சல்டன்சி, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆகியவை ஏற்கனவே தங்கள் அலுவலகங்களை அங்கே நிறுவியுள்ளன.
முதலில் 52 வாரங்களுக்குள் இந்தப் பூங்கா கட்டிமுடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் கட்டிட வடிவமைப்புகளை மாற்றவேண்டியிருந்ததால் இன்னும் அதிகமாக 12 வாரங்கள் அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்திலிருந்து 20 நிமிடத்தில் இந்த நவீன தொழில்நுட்பப் பூங்காவை அடைந்து விடலாம். இந்தத் தொழில்நுட்ப பூங்காஇந்தியாவிலேயே நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய பூங்கா என்று கூறினார் டிட்கோ சேர்மன் கோபால்.
யு.என்.ஐ.