தமிழகத்தில் இன்று
அணுகுண்டெல்லாம் எங்களுக்கு "ஜுஜூபி - சொல்கிறது பாகிஸ்தான்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
இந்தியாவுக்கு முன்பே 1983-ம் ஆண்டிலேயே வெடிகுண்டு சோதனைநடத்திவிட்டோம் என்று பாகிஸ்தான் நாட்டு விஞ்ஞானி சமர் முபாரக் மன்ட்தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள ஜீலம் ராணுவக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றபாகிஸ்தானில் பாதுகாப்புத் தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கில் அவர்பேசியதாவது:
பாகிஸ்தான் தனது பாதுகாப்புக்காக 1978-லேயே அணுகுண்டை வடிவமைத்தது.அதை 1983-ல் ரகசியமாகவும், வெற்றிகரமாகவும் சோதனை செய்தது.
சோதனையில் வடிவமைக்கப்பட்ட வெடிகுண்டு 95 சதவீதம் சரியானது என்றுஉறுதியானது. மேலும் அந்த வகையில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள்அவ்வப்போது ரகசியமாக பரிசோதிக்கப்பட்டன. இறுதியாக 1998-ம் ஆண்டு சாகாய்மலைப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 100 சதவீதம் வெற்றி கிடைத்தது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் மட்டுமே பாகிஸ்தான் அணு சக்தி கமிஷனால்இந்த அணுகுண்டு தயாரிக்கப்பட்டது என்று முபாரக் பேசியதாக பாகிஸ்தானிலிருந்துவெளியாகும் உருது பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
யு.என்.ஐ.