ஈரோ 2000 கால்பந்துப் போட்டியில் தோல்வி: 4 அணிகளின் பயிற்சியாளர்கள் ராஜினாமா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ராட்டர்டாம்:
தற்போது நடைபெற்று வரும் ஈரோ-2000 கோப்பை கால்பந்துப் போட்டியில் தங்களதுஅணி அடைந்த தோல்விக்குப் பொறுப்பேற்று 4 நாட்டு அணிகளின் பயிற்சியாளர்கள்ராஜினாமா செய்துள்ளனர்.
வியாழக்கிழமை நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியிடம் 3-1என்ற கோல் கணக்கில் ஹாலந்து தோல்வியடைந்ததை அடுத்து அந்த அணியின்பயிற்சியாளர் பிராங்க் ரிஜ்கார்டு ராஜினாமா செய்துள்ளார்.
ஏற்கெனவே, பிரான்ஸுடனான முதல் அரையிறுதியில் தோல்வியடைந்த போர்சுகல்அணியின் பயிற்சியாளர் ஹம்பர்ட் கோல்ஹோ, கால் இறுதியில் தோல்வியடைந்ததுருக்கி அணியின் பயிற்சியாளர் முஸ்தபா டெனிஸ்லி, தகுதிச் சுற்றிலேயேதோல்வியடைந்த நடப்புச் சாம்பியன் ஜெர்மனியின் பயிற்சியாளர் எரிக் ரிப்பெக்ஆகியோர் ஏற்கெனவே தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.
4-வது நபராக ஹாலந்து பயிற்சியாளர் ராஜினாமா செய்துள்ளார்.