For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
நேபாளுக்-கு பெட்ரோலியம் -வ-ழங்-கு-கி-ற-து இந்தியா
டெல்லி:
அண்டை நாடான நேபாளத்துக்கு பெட்ரோலியப் பொருட்களை சப்ளை செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக நேபாள நாட்டு எண்ணெய் நிறுவனத்துடன் மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் இரு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களின் மூலம் பெட்ரோலியப் பொருட்களை நேபாளத்துக்கு சப்ளை செய்வதுடன் பெட்ரோலியத் துறையில் சில தொழில்நுட்பஆலோசனைகளையும் இந்தியா வழங்கும்.
இரு நாட்டுக்கும் இடையேயான இரு தரப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை இந்த இரு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, July 1, 2000, 5:30 [IST]