தமிழகத்தில் இன்று
குழந்தைகளின் கை, கால்களை உடைக்கும் இலங்கை ராணுவ வீரர்கள்
ராமேசுவரம்:
தமிழ் வாலிபர்கள் மற்றும் குழந்தைகளின் கை, கால்களை உடைத்து இலங்கை ராணுவவீரர்கள் துன்புறுத்துவதாக ராமேசுவரம் வந்த அகதிகள் கண்ணிர் மல்க தெரிவித்தனர்.
சில நாள் இடைவேளைக்குப் பிறகு வெளிக்கிழமையன்று 22 ஆண்கள், 9 பெண்கள்,10 குழந்தைகள் உட்பட 11 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் அகதிகளாக வந்தனர்.இவர்கள் தணுஷ்கோடி அருகே உள்ள தாவுக்காடு கடற்கரையில் இறங்கினர்.
தனுஷ்கோடியில் முகாமிட்டு இருந்த இந்திய கடற்படை வீரர்கள் இந்த அகதிகள்படகில் வருவதைப் பார்த்துவிட்டு படகை சுற்றி வளைத்த போது படகை ஓட்டிவந்தவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். படகை ஓட்டி வந்தவர்களை கடற்படையினர்தேடி வருகின்றனர்.
அகதிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, திரிகோணமலை பகுதியிலிருந்து தப்பிவந்தவர்கள், அவர்கள் கூறியதாவது:
இலங்கை ராணுவ வீரர்களின் கொடுமை அதிகமாக இருக்கிறது. சிலரை முகமூடியுடன்அழைத்து வந்து யார் யார் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என கேட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என சொல்லப்படுபவரை சித்திரவதை செய்து துன்புறுத்துவார்கள்.
அவர்கள் பிடித்துச் செல்லும் தமிழ் வாலிபர்களை என்ன செய்கிறார்கள் என்பதேதெரிவதில்லை. நாங்கள் 71 கிலோ மீட்டர் தூரம் நடந்து தலைமன்னார் வந்துஅங்கிருந்து படகில் தப்பி வந்தோம். இது வரை 1500 க்கும் மேற்பட்டோர் பிடித்துச்செல்லப்பட்டனர் அவர்கள் நிலை என்ன என்றே தெரியிவில்லை.
இலங்கை ராணுவ வீரர்கள், தமிழ் வாலிபர்கள், குழந்தைகளின் கை, கால்களைஉடைத்து கொடுமைப்படுத்துகின்றனர் என்றனர்.
சுதாகரன் என்பவர் கூறுகையில் எனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்குஅழைத்துச் செல்ல முயன்றேன். குண்டு வெடிப்பு காரணமாக அழைத்துச் செல்லமுடியாமல் தப்பி வந்து விட்டோம் என்றார். அவரது மனைவி தற்போதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இனி தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து வாழ முடியாது. பலரும் தப்பி வரக்காத்திருக்கின்றனர் என அகதிகள் தெரிவித்தனர்.