தமிழகத்தில் இன்று
மலேசியாவில் திருட்டு தமிழ் வி.சி.டிகளுக்கு தடை வரும்
சென்னை:
தமிழ் படங்களின் திருட்டு விசிடிகள், வீடியோக்கள் மலேசியாவில் புழங்குவதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய அமைச்சர் டத்தோசாமிவேலு கூறியுள்ளார்.
தமிழில் வரும் திரைப்படங்கள் திரையரங்களுக்கு வரும் முன்னே திருட்டு வீடியோவில் வெளிவந்துவிடுகின்றன. இது போல் வீடியோவில் புதிய திரைப்படங்கள்வருவதை தடுப்பதற்கு மலேசியாவில் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும்என அந்த நாட்டு அமைச்சர் டத்தோ சாமிவேலு தெரிவித்துள்ளார்.
மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு சென்னை வந்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க புதிய செயலாளர் நடிகர் சரத்குமார், சென்னைமாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் மலேசிய அமைச்சரை சந்தித்து திருட்டு வீடியோவை தடுப்பது குறித்து பேசினர்.
தமிழகத்தில் எடுக்கப்படும் புதிய தமிழ் திரைப்படங்கள் மலேசியாவில் திருட்டு வீடியோ எடுத்து விநியோகம் செய்யப் படுவதாகவும் அதை தடை செய்யமலேசிய அரசு முயற்சி மேற்கொள்ளும்படியும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்
மலேசியாவில் இத்தகைய சட்டவிரோதமான செயல்களும் நடந்து வருகின்றனவா என்று மிகவும் ஆச்சரியப்பட்டார் டத்தோ சாமிவேல். மலேசியாவில்உரிமை பெறப்படாத படங்களை வி.சி.டி எடுப்பது தடை செய்யப்படும். இது குறித்த சட்டம் விரைவில் ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.
சட்டம் இயற்றப்பட்டவுடன் அது தமிழ் திரைப்பட துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும்.அதில் உள்ள சாதக பாதகங்கள் பற்றி மலேசிய அரசுக்குதெரிவித்து ஆலோசனைகள் கூறுங்கள் என்று சரத் குமாரிடமும், கராத்தே தியாகராஜனிடமும் அவர் கூறினார்.