தமிழகத்தில் இன்று
இலங்கைப் பிரச்சினை-யில் மத்திய அரசுக்கு கூட்டணிக் கட்சிகள் ஆதரவு - அத்வானி
சென்னை:
இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றுமத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி கூறினார்.
ஈரோட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் தமிழர் எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னைக்குஞாயிற்றுக்கிழமை காலை வந்த அத்வானி, ஈரோடு புறப்படும் முன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது:
மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே பகைமை ஏற்படுத்தி கூட்டணியை உடைக்கஎதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன.
இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
காஷ்மீர் சட்டப்பேரவையில் சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தொடர்பாக அடுத்த சில தினங்களில் மத்திய அரசு முடிவு எடுக்கும் என்றார்அத்வா-னி.
யு.என்.ஐ.