தமிழகத்தில் இன்று
பறிக்கப்படுகிறது கிளின்டனின் வக்கீல் லைசென்ஸ்
லிட்டில்ராக்:
மோனிகா லெவின்ஸ்கி செக்ஸ் வழக்கில் பொய் கூறியது தொடர்பாக அமெரிக்க அதிபர் கிளின்டனின் லைசென்சைப் பறிக்க ஆர்கென்சாஸ் உச்சநீதிமன்றம்முடிவெடித்துள்ளது.
கிளின்டனுக்கு இதற்காக 30 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் கிளின்டன் மீது வெள்ளை மாளிகைப் பணிப்பெண் மோனிகா லெவின்ஸ்கி செக்ஸ் புகார் கூறினார்.
இதை முதலில் கிளின்டன் மறுத்து வந்தார். பின்னர் நாட்டு மக்களிடம் பகிங்கரமாக மன்னிப்புக் கேட்டார். தன் மனைவி, மற்றும் மகளிடமும்இதற்காக வருத்தம் தெரிவித்தார்.
ஏற்கனவே அதிபர் கிளின்டன் வக்கீலுக்குப் படித்து லைசென்ஸ் வைத்திருப்பவர்.
நீதிமன்றத்தில் கிளின்டன் பொய்வாக்குமூலம் அளித்ததால் அவர் வக்கீல் பணிக்குத் தகுதியற்றவர். அவரது வக்கீல் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படவேண்டும் என்று புகார் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஆர்க்கன்சாஸ் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை முடிவில் கிளின்டன் வக்கீல் பதவியை வகிக்கத்தகுதியற்றவர் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிளின்டன் கருத்துத் தெரிவிக்கையில் மற்ற வக்கீல்கள் போல் எனக்கும் ஒரே மாதிரி சட்டம் இருந்தால் லைசென்ஸ் இழப்பதை தவிர வேறுவழியில்லை என்றார்.