தமிழகத்தில் இன்று
பாண்டிச்சேரி இடைத்தேர்தலில் முதல்வர் சண்முகம் வெற்றி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் ஏனாம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் முதல்வர் சண்முகம் வெற்றி பெற்றார்.
இத்தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17, 588 ஆகும். இதில் 13, 803 வாக்குகள் பதிவானது.
முதல்வர் சண்முகம் 8888 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த இடைத்தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதாக் கட்சிவேட்பாளர் கங்காதரப் பிரதாப் 4659 ஓட்டுக்கள் பெற்றார்.
சுயேச்சை வேட்பாளர்கள் காசிபிரசாத் 145 ஓட்டுக்களும், சிவபிரசாத் 111 ஓட்டுக்களும் பெற்றனர்.
முன்னதாக பாண்டிச்சேரியில் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட சண்முகம் எம்எல்ஏ வாக இல்லாத காரணத்தால் ஏனாம் தொகுதியில் எம்எல்ஏதனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அங்கு வெள்ளிக்கிழமை நடந்த இடைத்தேர்தல் நடந்தது. முதல்வர் சண்முகமும், பாரதியஜனதாக்கட்சி சார்பில் கங்காதரப்பிரதாப்பும்போட்டியிட்டனர்.
இதற்காக ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பு முடிவில் முதல்வர் சண்முகம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
யு.என்.ஐ.