தமிழகத்தில் இன்று
2008-ல் சாப்ட்வேர் ஏற்றுமதி இலக்கு ரூ.2.20 லட்சம் கோடி
மும்பை:
2008-ம் ஆண்டில் இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதி இலக்கு ரூ.2.20 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய சாப்ட்வேர் மற்றும் சர்வீஸ் கம்பெனிகள் (நாஸ்காம்)அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட ஆண்டு ஆய்வறிக்கையில் இத் தகவல் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் அடுல் நிஸார் கூறியதாவது:
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு இந்திய அரசு அதிக முக்கியத்தும் கொடுக்கிறது. புதிய நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாளுக்கு நாள்அதிகரித்து வரும் போட்டிகளையும், தேவைகளையும் சமாளிக்க தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இது தவிர, சாப்ட்வேர் நிபுணர்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேற்கண்ட காரணங்களால் 2008-ம் ஆண்டில் இந்தியாவின் சாப்ட்வேர்ஏற்றுமதி 2.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையே இலக்காக வைத்து சாப்ட்வேர் நிறுவனங்களும்,மத்திய அரசும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
1999-2000-ம் ஆண்டில் சாப்ட்வேர் ஏற்றுமதியில் இந்தியாவுக்கு ரூ.23,350 கோடி வருமானம் கிடைத்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 57சதவீதம் அதிகமாகும். அடுத்த ஆண்டு சாப்ட்வேர் ஏற்றுமதி மூலம் இந்தியாவுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி கிடைக்கும் என்றஎதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.