For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
பாகிஸ்தான் வறட்சிக்கு துபாய் இளவரசர் ரூ.4.4 கோடி உதவி
துபாய்:
பாகிஸ்தானில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்கு துபாய் இளவரசரும், ஐக்கிய அரசுக் குடியரசின் பாதுகாப்புத் துறைஅமைச்சருமான ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்டோம் ரூ.4.4 கோடி நிதி வழங்கியுள்ளார்.
இதற்கான காசோலையை பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்பிடம் ஐக்கிய அரசுக் குடியரசு அதிகாரி திங்கள்கிழமை வழங்கினார்.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்துள்ள ஷேக் முகம்மதுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக முஷாரப் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, July 4, 2000, 5:30 [IST]