தமிழகத்தில் இன்று
இந்து மதத்திற்கு மாறிய முஸ்லீம் குடும்பம்
கல்கத்தா:
கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் குடும்பம் இந்து மதத்திற்கு மாறியுள்ளது.
இக்குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் இந்து மதத்திற்கு மாறி விட்டனர். எளிமையாகநடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த மத மாற்றம் நிகழ்ந்தது. இந்தியாவின் பெருநகரம்ஒன்றில் இது போல, பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்து மதத்திற்கு மாறுவது இதுதான்முதல் முறையாகும்.
மதமாற்றங்கள் இதுவரை கிராமப்புறங்களில் மட்டுமே இருந்து வந்தது. இப்போதுதான்முதல் முறையாக நகரம் ஒன்றில் நடந்துள்ளது. கல்கத்தாவைச் சேர்ந்த முன்னா ஜமாதார்குடும்பத்தினர்தான் இப்போது இந்து மதத்திற்கு மாறியுள்ளனர். விஸ்வ இந்து பரிஷத்இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
மிகவும் ரகசியமான முறையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இருப்பினும் அப்பகுதியைச் சேர்ந்த கேபிள் டிவியில் இதுகுறித்து செய்திவெளியானது.
இந்துவாக மாறிய முன்னாவின் இப்போதைய பெயர் ஆஷிஸ். மத மாற்ற நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்த வி.எச்.பி. தலைவர் ஒருவர் கூறுகையில், மத மாற்றம் தொடர்பானநிகழ்ச்சிகள் குறித்து வெளியிட முடியாது. ஆனால் முன்னா குடும்பத்தினரை இந்துமதத்தில் சேர்த்து விட்டோம்.
மேலும் இதுகுறித்த தகவல் வேண்டுமானால், எங்களுக்கு நன்கொடை ஏதாவதுகொடுங்கள். மத மாற்றம் தொடர்பான எங்களது நடவடிக்கை குறித்த முழுவிவரங்களையும் தெரிவிக்கிறோம் என்றார் அவர்.
இந்த மத மாற்றம் குறித்த எந்தத் தகவலும் போலீஸாருக்கோ அல்லது அரசுநிர்வாகத்திற்கோ தெரியவில்லை. மேலும், மதம் மாறிய முஸ்லீம் குடும்பத்தினர்தங்களது மத மாற்றம் குறித்த நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனரா என்றும்தெரியவில்லை.
மத மாற்றம் குறித்து நகோடா மசூதி இமாமிடம் கேட்டபோது, முஸ்லீம் குடும்பத்தினர்இந்து மதத்திற்கு மாறியதாக எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.இதுகுறித்து எங்களுக்குத் தெரியாது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.