For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

புதுவையின் காமராஜர் சண்முகம்...மூப்பனார் பாராட்டு

சென்னை:

பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் சென்னையில் செவ்வாய்க்கிழமை த.மா.கா.தலைவர் மூப்பனார் சந்தித்தார்.

ஏனாம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளசண்முகத்திற்கு, மூப்பனார் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர்இருவரும் சத்தியமூர்த்தி பவனில் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு இருவரும் அளித்த பேட்டி வருமாறு:

மூப்பனார் கூறுகையில், 1954ம் ஆண்டில் தனக்கு சம்பந்தமே இல்லாத குடியாத்தம்சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு காமராஜர் வெற்றி பெற்றார். அதே போல்புதுவை முதல்வர் சண்முகம் காங்கிரசுக்கு சம்பந்தமே இல்லாத ஏனாம் தொகுதியில்போட்டியிட்டு சண்முகம் வெற்றி பெற்றுள்ளார். அவரை நான் பாராட்டுகின்றேன்.

அதே போல் அவர் பாண்டிச்சேரியில் நல்லாட்சி தருவார். இந்த ஓராண்டு மட்டுமல்ல,அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கும் அவர் நல்லாட்சி தருவார். இந்த வெற்றிதமிழ்நாட்டிலும் தொடரும். அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என்றார்.

சண்முகம் பேசுகையில், புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு மூப்பனார் வழிவகுத்தார். யார் முதல்வராக வருவது என்ற பிரச்சனை எழுந்த போது மூப்பனார்,சோனியா ஆகியோர் கலந்து பேசி என்னை பொறுப்பில் அமர்த்தினர்.

இந்த பொறுப்பை நான் திறம்பட நிறைவேற்றி வருகிறேன். நான் தேர்தலில்போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலை வந்தபோது, தோழமைக்கட்சி உறுப்பினர்கள் பலர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தனர்.அவர்களுக்கெல்லாம் என் நன்றி.

கடைசியாக ஏனாம் தொகுதி சுயேச்சை உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணராவ் பதவி விலகமுன் வந்ததை ஏற்று, அத் தொகுதியில் நான் போட்டியிட்டேன். ஒரு முதல்வராகஇல்லாமல் சாதரண வேட்பாளராக அரசு வாகனங்களை பயன்படுத்தாமல், நடந்தேசென்று வாக்குககள் கேட்டேன்.

ஆனால், எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்தியமற்றும் மாநில அமைச்சர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர். தெலுங்கு -தமிழர்என்ற பிரச்சனையையும் கிளப்பினர். அதையெல்லாம் மீறி மக்கள் என்னை வெற்றிபெறச் செய்தனர்.

இந்த வெற்றி காங்கிரஸ், த.மா.கா, அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக்கு கிடைத்தவெற்றி, இந்த வெற்றியை பயன்படுத்தி புதுவையில் ஏழை, எளிய நடுத்தர மக்களின்வாழ்க்கை மேம்பாட்டுக்கு உழைப்பேன். தொழில் மற்றும் விவசாயத் துறைவளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன் என்றார் சண்முகம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X