தமிழகத்தில் இன்று
இலங்கையில் பத்திரிகைகளுக்கு மீண்டும் தடை
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேநடந்து வரும் சண்டை தொடர்பான செய்திகளை வெளியிட பத்திரிகைகளுக்குஇலங்கை அரசு மீண்டும் தடை விதித்துள்ளது.
யாழ்ப்பாண தீபகற்பத்தில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே மே மாதம் முதல்கடும் சண்டை நடந்து வருகிறு. இச் சண்டை தொடர்பான செய்திகளை வெளியிடபத்திரிகைகளுக்கு மே 4-ம் தேதி இலங்கை அரசு தடை விதித்தது.
சண்டை தொடர்பான எச் செய்தியை வெளியிட விரும்பினாலும், அது குறித்துஇலங்கை அரசுக்கு தெரிவித்துவிட்டு அனுமதி கிடைத்தபிறகுதான் செய்தியைவெளியிடவேண்டும் என்று பத்திரிகைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
அதன்படிதான் பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டு வந்தன. இந் நிலையில்,வெளிநாட்டுப் பத்திரிகைகள் மீதான தடையை இலங்கை அரசு கடந்த மாதம் விலக்கிக்கொண்டது.
புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டை தொடர்பானசெய்திகளை பத்திரிகைகள் தங்கள் விருப்பம் போல் வெளியிட்டுக் கொள்ளலாம்என்றும், உள்நாட்டுப் பத்திரிகைகள் மீதான தடையை விலக்கிக் கொள்வது பற்றிபின்னர் அறிவிக்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்தது.
இந் நிலையில், சில நாட்களுக்கு முன் பத்திரிகைகள் மீதான கட்டுப்பாடுகளைக்கண்காணிக்கும் அதிகாரியாக ஆரிய ரூபசிங்கே நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்துஇலங்கை உச்சநீதிமன்றத்தில் இரு பத்திரிகைகள் வழக்குத் தொடர்ந்தன.
இவ் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ரூபசிங்கேவுக்கு அதிகப்படியான அதிகாரம்வழங்கப்பட்டுள்ளது சட்டவிரோதம் என்றும் அவரது நியமனத்தை ரத்துசெய்யவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. ஜூலை 1-ம் தேதி இத் தீர்ப்புவழங்கப்பட்டது.
இதையடுத்து பத்திரிகைகள் மீது மீண்டும் தடை விதித்த இலங்கை அரசு,ரூபசிங்கேவை தலைமை சென்சார் அதிகாரியாக மீண்டும் நியமித்துள்ளது.
இப் புதிய அறிவிப்பின்படி, தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செய்திவெளியிடும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசுதெரிவித்துள்ளது.
மேலும், ரூபசிங்கேவுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்த அதிகாரங்களில் சிலதிரும்பப் பெறப்பட்டுவிட்டன. ஆனால், தடையை மீறி செய்திகளை வெளியிடும்பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்க அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.