For Daily Alerts
Just In
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் - வாஜ்பாய்
ரயிலை மறித்த அம்பேத்கர் இயக்கத்தினர் கைது
சென்னை:
ரயில் மறியலில் ஈடுபட்ட அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.
அரசியல் சட்டத்தை மறுஆய்வு செய்ய மத்திய அரசு நிபுணர் குழு அமைத்துள்ளது.அதை அம்பேத்கர் மக்கள் இயக்கங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
அம்பேத்கர் மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரசியல் சட்ட மறுஆய்வைகைவிடக் கோரி புதன் கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சென்னை சென்ட்ரல் ரயில் நலையத்தில் வை.பாலசுந்தரம் தலைமையில்ஏராளமானவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்துநிறுத்தி கைது செய்தனர்.
Story first published: Wednesday, July 5, 2000, 5:30 [IST]