பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
சுதந்திர தினத்தை கப்பலில் கொண்டாடிய கிளின்டன்
நியுயார்க்:
இந்த நூற்றாண்டின் முதல் அமெரிக்க சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. அமெரிக்க கடற்படைக் கப்பலில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்ச்சியில் அதிபர் பில் கிளின்டன் கலந்து கொண்டார்.
அதிபர் பில் கிளின்டன், அதிபராக இருந்து கலந்து கொண்ட கடைசி சுதந்திர தின நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இன்னும் சில மாதங்களில்அவரது பதவிக் காலம் முடிவு பெறுகிறது.
நியுயார்க் துறைமுகத்தில் இருந்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடி பெயரிடப்பட்ட கப்பலில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.அக் கப்பல் முன் செல்ல உலகம் முழுவதும் இருந்து வந்த பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 பெரிய கப்பல்கள் அதைப் பின் தொடர்ந்து சென்றன. அதிபர்பில் கிளின்டன் சென்ற கப்பலுக்குப் பாதுகாப்பாக அக் கப்பலைச் சுற்றி அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த போர் படகுகள் அணிவகுத்து வந்தன.
இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிபர் பில் கிளின்டன், தன் வாழ்நாளில் கலந்து கொண்ட மிகப்பெரிய கப்பல் நிகழ்ச்சிஇது என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் அடையாளமாக உள்ள சுதந்திர தேவியின் நிழலில் இருந்து பேசுகிறேன். நாம் நமது பொற்கதவை எப்போதும் திறந்துவைத்திருக்கவேண்டும். வெளிநாட்டு மக்களை நம் நாட்டுக்கு வரவேற்கும் அதே வேளையில், அவர்களை நமது இதயத்துக்குள் வரவேற்கவேண்டும்.
எல்லோரையும் சமமாக மதிக்கும் குணம், கடவுள் கண்களுக்குச் சமமானது. எல்லோரையும் அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை நமக்குஇணையாக மதித்து நடக்கவேண்டும். இதுவே ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் நமது தீர்மானமாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றார்கிளின்டன்.