பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
பிணையாளிகளை விடுவிக்க பிஜி புரட்சியாளர்களுக்கு 2 நாள் கெடு
சுவா:
பிஜியில் இந்திய வம்சாவளி பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட பிடித்து வைத்துள்ள 27 பிணைக் கைதிகள் அனைவரையும் ஒப்படைத்துவிட்டு,நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற புரட்சிப்படையினருக்கு ராணுவம் இரண்டு நாள் கெடு விதித்துள்ளது.
பிஜியில் கடந்த மே 19-ம் தேதி புரட்சி ஏற்பட்டது. ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிப் படையினர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பிரதமர் மகேந்திரசவுத்ரி உள்பட பலரைப் பிடித்து வைத்துக் கொண்டனர்.
புரட்சிக்குப் பிறகு பிஜியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் ராணுவத்தின் கையில் ஆட்சி வந்தது. அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து பிணைக்கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட 27 பேர் விடுவிக்கப்படவில்லை.
பிஜி நாட்டவர்களைக் கொண்டு பிஜியில் புதிய ஆட்சி அமைந்தால்தான் பிணைக் கைதிகளை விடுவிப்போம் என்று புரட்சிப்படையினர் அறிவித்துவிட்டனர்.அப்போது பிணைக் கைதிகளை விடுவித்து உடனே சரணடையும்படி அவர்களுக்கு ராணுவம் ஒரு நாள் கெடு விதித்தது.
ஆனால், பிணைக் கைதிகளை புரட்சிப்படையினர் விடுவிக்கவில்லை. இந் நிலையில், பிஜி பிரதமராக அதே நாட்டைச் சேர்ந்த கராசே செவ்வாய்க்கிழமைநியமிக்கப்பட்டார். புதிய ஆட்சியில் இந்தியர்கள் யாரும் இடம் பெறமாட்டார்கள் என்று கராசே அறிவித்துள்ளார்.
இந் நிலையில், புரட்சிப் படையினர் தாங்கள் பிடித்து வைத்துள்ள பிரதமர் உள்பட 27 பிணைக் கைதிகளையும் உடனே விடுவிக்கும்படியும், தங்கியுள்ளநாடாளுமன்றக் கட்டடத்தை விட்டு வெளியேறவேண்டும் என்றும் அதற்கு இரண்டு நாள் கெடு விதித்திருப்பதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது.
புதன்கிழமை இரவு முதல் 48 மணி நேர கெடு அமலுக்கு வருகிறது. இதைப் புரட்சிக்காரக்களாக மன்னிப்புக் காலமாக கருதிக் கொண்டு உத்தரவைஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் பிலிபோ தராகினிகினி தெரிவித்தார்.