பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
தேர்தலுக்கு ஆயத்தமாகிறார் மூப்பனார்
சென்னை:
கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும்மாவட்டத் தலைவர்களுடன் தமாகா தலைவர் மூப்பனார் 8-ம் தேதி ஆலோசனைநடத்துகிறார்.
கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு கட்சியை வலிமைப்படுத்தும்முயற்சிகளில் மூப்பனார் இறங்கியுள்ளார். முதல் கட்டமாக கட்சியின் எல்லாமட்டத்திலும் மாற்றம் செய்துள்ளார். கட்சியின் அடிப்படையாக விளங்குகிற மாவட்டத்தலைவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியதோடு, சரிவர செயல்படாத பலரைபொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.
36 ஆக இருந்த கட்சியின் மாவட்ட அமைப்புகளை 51 ஆக உயர்த்தினார். அவற்றிற்குமாவட்டத் தலைவர்களை நியமித்துள்ளார். மாவட்டத் தலைவர்கள் பொறுப்பில்இருந்தவர்களில் 20 பேருக்கு மட்டுமே மீண்டும்பொறுப்புகள் தந்துள்ளார். 16 பேரைபதவியில் இருந்து நீக்கியுள்ளார். 31 மாவட்டங்களுக்கு புதியவர்களை பொறுப்பில்அமர்த்தியுள்ளார்.
இப்பணிகள் முடிவடைந்து புதிய மாவட்டத் தலைவர்கள் பொறுப்பேற்று விட்டனர்.அவர்களை எல்லாம் அழைத்து கட்சிப்பணிகள் குறித்து விவாதிக்க மூப்பனார் முடிவுசெய்துள்ளார். அதற்கான கூட்டம் 8ம் தேதி தமாகா தலைமை அலுவலகமானசத்தியமூர்த்திபவனில் நடைபெறுகிறது.
அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்சியை வலிமைப்படுத்தி தேர்தலை சந்திக்கத்தேவையான செயல் திட்டங்கள் குறித்து மாவட்டத் தலைவர்களுக்கு மூப்பனார் இந்தகூட்டத்தில் விவரிக்க உள்ளார்.
மேலும் கட்சியில் காணப்படும் கோஷ்டிப் பிரச்னைகள் குறித்தும், அதற்கு பலியாகிவிடாமல் கட்சி வளர்ச்சிப் பணிகளில் அக்கறை செலுத்தும்படியும் புதியவர்களைஅவர் கேட்டுக் கொள்ளவிருப்பதாக சத்தியமூர்த்திபவன் வட்டாரம் தெரிவித்தது.