For Daily Alerts
Just In
தானே மாரத்தான்: 40 ஆயிரம் பேர் பங்கேற்பர்
தானே:
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் ஜூலை 9-ம் தேதி நடைபெற உள்ள 11-வது தானே வர்ஷா மாரத்தான் ஓட்டத்தில் 40ஆயிரத்துக்கும்அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மாரத்தான் அமைப்பு கமிட்டித் தலைவர் சதீஷ் பிரதான் கூறியதாவது:
தானேயில் இம் மாதம் 9-ம் தேதி மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இதுவரை சுமார் 40 ஆயிரத்துக்கும்அதிகமானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கம், அஸ்ஸாம், டெல்லி உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், பஞ்சாப் போலீஸ், எல்லைப் பாதுகாப்புப் படை போன்றபாதுகாப்பு படை அணிகளில் இருந்தும் வீரர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார் சதீஷ் பிரதான்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, July 6, 2000, 5:30 [IST]