விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் சாம்ப்ராஸ், அகாஸி, ராப்டர், வால்ட்ச்கோவ்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் அரையிறுதி ஆட்டத்தில் விளையாடசாம்ப்ராஸ், அகாஸி, ராப்டர், வால்ட்ச்கோவ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
புதன்கிழமை நடந்த கால் இறுதி ஆட்டங்களில் இவர்கள் 4 பேரும் எதிர்ஆட்டக்காரரை எளிதாக வென்றனர். சாம்ப்ராஸுக்கும், கெம்ப்பில்லுக்கும்இடையேயான ஆட்டம் மட்டும் 4 செட்டுகளுக்கு நீடித்தது. மற்ற மூன்று ஆட்டங்களும்3 செட்டுகளில் முடிந்துவிட்டன.
முதல் நிலை ஆட்டக்காரரான சாம்ப்ராஸ் 6-4, 6-7 (4-7), 6-4, 6-4 என்ற செட்கணக்கில் கேம்ப்பில்லை தோற்கடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இரண்டாம் நிலை ஆட்டக்காரர் அகாஸி 7-6 (7-4), 6-3, 6-4என்ற செட் கணக்கில் பிலிப்போஸிஸைத் தோற்கடித்தார்.
3-வது கால் இறுதி ஆட்டத்தில் ராப்டர் 6-3, 6-2, 7-6 (7-1) என்ற செட் கணக்கில்பாப்பைத் தோற்கடித்தார்.
கடைசி கால் இறுதி ஆட்டத்தில் வால்ட்ச்கோவ் 7-6 (7-2), 7-6 (7-2), 6-4 என்ற செட்கணக்கில் பிளாக்கைத் தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தார்.
வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் 6 முறை விம்பிள்டன் சாம்பியனானசாம்ப்ராஸ், முதல் முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளவால்ட்ச்கோவைச் சந்திக்கிறார்.
மற்றொரு அரையிறுதியில் ராப்டரும், அகாஸியும் மோதுகின்றனர்.