இதென்ன கலாட்டா...? கவாஸ்கரின் லாக்கர் பணம் எழுப்பும் குழப்பம்
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ள சுனில் கவாஸ்கரின் வங்கி லாக்கரில் உள்ள பணம்குறித்து மும்பை ஜிம்கானா கிளப் பொதுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கான ரூபாய்களை இந்திய கிரிக்கெட் வீரர்கள் லஞ்சமாகப் பெற்றதாக சமீபத்தில் புகார்கள் கூறப்பட்டுவருகின்றன. இது தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில், கவாஸ்கரின் வங்கி லாக்கரில் உள்ள பணம் குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற ஜிம்கானா கிளப் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு லாக்கரில் உள்ள பணம் குறித்து தகவல் தெரிவிக்க இருந்தார் கவாஸ்கர்.
ஆனால், வியாழக்கிழமை நடந்த கூட்டத்தை அவர் புறக்கணித்துவிட்டார்.
கிரிக்கெட் சூதாட்டம் குறித்த புகார்கள் எழுந்தவுடன் கவாஸ்கரின் வங்கி லாக்கரில் ஏராளமாக பணம் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதைகவாஸ்கரின் மனைவி மார்ஷ் நீல் மறுத்துள்ளார்.
கிரிக்கெட் வர்ணனையில் கவாஸ்கர் பிஸியாக உள்ளார். அவர் கிரிக்கெட் விளையாடப்படும் நாடுகளுக்குச் செல்வதும், வருவதுமாக உள்ளார். அவருக்குவங்கியில் பணம் போட நேரமில்லை. வங்கி லாக்கரில் ஒரு சில ஆயிரம் ரூபாய் மட்டுமே இருக்கும் என்றார் மார்ஷ் நீல்.
யு.என்.ஐ.