தமிழகத்தில் இன்று
ஸ்பெயின் சாலை விபத்தில் 27 பேர் பலி
சோரியா (ஸ்பெயின்):
ஸ்பெயினில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற ஒரு லாரியும் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றபேருந்தும் வியாழக்கிழமையன்று மோதிக் கொண்டதில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த விபத்து சோரியா என்ற நகருக்கு 110 கிலோமீட்டர் தூரத்தில் நடந்தது. பன்றிகளை ஏற்றிச்சென்ற லாரி தடம் மாறியதில், பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இறந்தஅனைவரும் 15 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் பார்சிலோனாவில் உள்ளஉயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்,
விபத்தில் இறந்தவர்களை காப்பாற்ற உதவிப் பணியினர் அனுப்பப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சும் விபத்து நடந்த இடத்திற்குஅனுப்பப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
22 பேர் சம்பவ இட்த்திலேயே இறந்து விட்டனர். 5 பேர் மருத்துவமனையில் இறந்தனர்.
யு.என்.ஐ.