For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கர்நாடக சர்ச்சில் குண்டுவெடிப்பு
ஹூப்ளி:
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் மிகவும் பழமை வாய்ந்த சர்ச்சில் சனிக்கிழமை காலை நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து நகரின் பல்வேறுபகுதிகளில் வன்முறை வெடித்தது.
சர்ச்சின் கதவு வெடிகுண்டு விபத்தில் சேதமடைந்தது. வேறு சேதம் குறித்துத் தெரியவில்லை. சர்ச்சில் வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஒருபிரிவினர் பஸ் நிலையத்தில் வன்முறையில் இறங்கினர். அரசு பஸ்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பஸ்கள், ஒரு லாரி, ஆட்டோ ஆகியவைஇதில் சேதமடைந்தன.
குண்டுவெடிப்பு மற்றும் வன்முறையைத் தொடர்ந்து நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, July 8, 2000, 5:30 [IST]