தமிழகத்தில் இன்று
பூசலில் தவிக்கும் விக்கிரமசிங்கே கட்சி
கொழும்பு:
இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் தலைமைப் பதவி குறித்து பூசல் வெடித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் ஆகஸ்ட் 24-ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து இலங்கையில்அரசியல் சூழ்நிலை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் பூசல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை, அவசர நிலைசட்டத்தை நீட்டிப்பது தொடர்பான தீர்மான் வாக்கெடுப்பிற்கு வந்தபோது இது வெளிப்பட்டது. கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறி, மூத்ததலைவர்களில் ஒருவரான ரோனி டி மெல், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
இதேபோல கட்சியின் துணைத் தலைவரும் அதிபர் சந்திரிகாவின் தம்பியுமானஅனுரா பண்டாரநாயகவேவும் அதிருப்தியில் உள்ளார். விரைவில் நடைபெறவுள்ளநாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் போட மாட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார்.
1977-ம் ஆண்டு முதல் 1988-ம் ஆண்டு வரை ஆட்சிப் பொறுப்பில் ஐக்கிய தேசியக் கட்சி இருந்தபோது அதில் நிதியமைச்சராக இருந்தவர் டி மெல்.அவர் கூறுகையில், அவசர நிலைச் சட்டத்தை நீட்டிப்பதை எதிர்த்து வாக்களிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்தது தேசத் துரோகம் ஆகும் என்றார்.இவர் விரைவில் அதிபர் சந்திரிகாவின் மக்கள் கூட்டணியில் சேருவார் என்று தெரிகிறது.
அதிருப்தியில் உள்ள அனுரா பண்டாரநாயகே கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் கூட்டணிக் கட்சிஆகியஇரண்டிலும் எதுவுமே இல்லை. இருகட்சிகளும் உருப்படாத கட்சிகள். இந்தக் கட்சிகளுக்கு ஓட்டுப் போடுவதை விட பேசாமல் இருக்கலாம் என்றார் அவர்.
டி மெல்லும், அனுராவும் முன்பு இலங்கை சுதந்திராக் கட்சியில் இருந்தவர்கள். இந்தக் கட்சி ஆளும் ஐக்கியகூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அங்கிருந்துஇரண்டு முறை விலகியுள்ளனர்.
தற்போது டிமெல், அனுரா ஆகியோரின் இந்தப் போக்குக்கு, கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கே மீதுள்ள அதிருப்தியே காரணம் என்று அரசியல்நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் விஜயபாலா மென்டிஸ், சரத் அமுங்கமா, நந்தா மேத்யூஆகியோர் மக்கள் கூட்டணிக்குத் தாவினர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் இப்போதைய பலம் 80 ஆகும். மொத்தம் 225 பேர் கொண்டது நாடாளுமன்றம். 1994-ல்நடந்த பொதுத் தேர்தலின்போது, 94 இடங்களில் இக்கட்சி வெற்றி பெற்றது. ஆனால் இவர்களில் 7 பேர் சிலோன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.தேர்தல் முடிந்தவுடன், ஆளும் கூட்டணிக்குத் தாவி விட்டார்கள்.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் பிளவு ஏற்பட்ட வருவது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இது அதிபர் சந்திரிகாவுக்கு தேர்தலில் சாதகமாக அமையும் என்ற கருத்து நிலவுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.