தமிழகத்தில் இன்று
உயிரையும் பொருட்படுத்தாமல் மாடு கடத்தலைத் தடுத்த தாமரைக்கனி
ஸ்ரீவில்லிப்புத்தூர்:
கேரள மாநிலத்திற்கு அடிமாடுகளை கடத்திச் சென்ற லாரிகளைத் தடுக்க முயன்ற அதிமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனியை லாரியை ஏற்றிக் கொல்ல சிலர்முயன்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ தாமரைக்கனி, வத்திராயிருப்பு என்ற இடத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு காரில் வந்து கொண்டிருந்தார்.அவருடைய கார் இந்திரா நகர் விலக்கு அருகே வரும் போது இரண்டு லாரிகளில் மாடுகள் கடத்தப்படுவதைப் பார்ததார்.
இதையடுத்து லாரியை நிறுத்துமாறு சைகை காட்டினார்.
அவை நிற்காததால் அதை விரட்டிச் சென்று ஸ்ரீ வில்லிப்புததூர் அருகே லாரிகளை மடக்கினார். அப்போது ஒரு லாரி வேகமாக கடந்து சென்று விட்டது. ஒருலாரி மட்டும் பிடிபட்டது.
மற்றொறு லாரியையும் நிறுத்துவதற்காக ஆட்டோவில் விரட்டிச் சென்ற தாமரைக் கனி, லாரியின் முன் சென்று ஆட்டோவுடன் நின்றார். ஆனால்லாரியை நிறுத்தாத டிரைவர், ஆட்டோ மீது ஏற்ற முயன்றார். ஆனால் அப்போது எதிர் திசையில் வேறொரு வாகனம் வந்ததால் ஆட்டோ மீது லாரிமோதுவது தடுக்கப்பட்டது. இதனால், தாமரைக்கனி உயிர் தப்பினார்.
வீர, தீரத்துடன் லாரியை நிறுத்திய தாமரைக்கனி, போலீஸ் நிலையத்துக்கு லாரியை கொண்டு வந்தார்.அதற்குள் அங்கு மக்கள் கூடி விட்டனர். தாசில்தார்ரங்கமணி வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அப்போது மேலும் 3 லாரிகள் மாடுகளுடன் கடந்து சென்றன. அவற்றையும் தாமரைக்கனி மறித்துநிறுத்தினார்.
விருதுநகர் கலெக்டருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடிமாடுகள், கறிக்காகக் கடத்தப்படுவதைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பிடிபட்ட 5 லாரிகளில் மொத்தம் 200 -க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன. கடந்த மாதம் பிரதமருக்கு பேக்ஸ் அனுப்பிய தாமரைக்கனி, ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் பல இடங்களிலிருந்து கேரளாவிற்கு அடிமாடுகள் கறிக்காக கடத்தப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். பதில் அனுப்பிய பிரதமர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.