தமிழகத்தில் இன்று
வைகையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
சென்னை:
பெரியாறு பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து சனிக்கிழமை மாலை தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:
பேரணையிலிருந்து கல்லந்திரி வரையுள்ள பெரியாறு பாசன ஒரு போக 45 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பாசனம் பெறும் வகையில் சனிக் கிழமைமாலை 6 மணி அளவில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வினாடிக்கு 500 கன அடி வீதம் நாற்று நடுவதற்காக திறந்து விடப்படும். செப்டம்பர் மாதம் வரையில் பெரியாறு பிரதான கால்வாய்களில் தண்ணீர்விடப்படும்.
மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரையிலுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்காக ஜூலை 10ம் தேதி மாலை 6 மணிக்கு வைகை ஆற்றில் இருந்துதண்ணீர் திறந்து விடப்படும்.
வினாடிக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் கன அடி வரை 6 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.