தமிழகத்தில் இன்று
பிரான்ஸுடன் சேர்ந்து பீரங்கி தயாரிக்கிறது சவூதி நிறுவனம்
துபாய்:
சவூதி அரேபியால் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று பிரான்ஸ் நாட்டுடன் கூட்டு சேர்ந்து பீரங்கி தயாரிப்பில் ஈடுபட உள்ளது.
இத் தகவலை சவூதி அரேபியாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
பிரான்ஸுடன் சவூதி அரேபியா கூட்டு சேர்ந்து பீரங்கி தயாரிக்க உள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாயின. இச் செய்தியை அவர் மறுத்து மேற்கண்டதகவலை தெரிவித்தார்.
பீரங்கி தயாரிப்பு தொடர்பாக பிரான்ஸுடன் சவூதி அரேபியா அரசு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. தனியார் துறை நிறுவனம்தான் ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பீரங்கி வாங்குவது தொடர்பாக இதுவரை எந்த ஒப்பந்தத்தையும் சவூதி அரேபியா செய்து கொள்ளவில்லை. இனிமேலும் அத்தகையஒப்பந்தமும் செய்து கொள்ளாது.
தனியார் துறை ஒத்துழைப்புடன் பீரங்கிகளைத் தானே தயாரிக்க சவூதி அரேபிய அரசு விரும்புகிறது. பிரான்ஸுக்கும், தனியார் துறை நிறுவனத்துக்கும்இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் சவூதி அரேபிய அரசின் பங்கு ஏதும் இல்லை என்றார் அவர்.
கடந்த ஜூன் மாதம் பிரெஞ்சு பாதுகாப்புத் துறை அமைச்சர் அலைன் ரிச்சர்டு, சவூதி அரேபியா வந்திருந்தார். அப்போது அந் நாட்டின் உள்ள தனியார் துறைநிறுவனங்களின் தலைவர்களிடன் அவர் பேச்சு நடத்தினார். அப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பீரங்கி தயாரிக்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.