பந்தைச் சுர்ர்ரண்டிய வக்கார் யூனிஸ் சஸ்பெண்ட்
கொழும்பு:
பால் டேம்பரிங்கில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இலங்கையில் தற்போது இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர்நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பால் டேம்பரிங்கில் ஈடுபட்டதாக வக்கார் யூனிஸ் மற்றும் அஸார் மெஹ்மூத் ஆகியோர்மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரெப்ரீ ஜான் ரீடிடம் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தம்மிகா ரணதுங்கா புகார் கொடுத்தார்.
புகாரை விசாரித்தபோது, வக்கார் யூனிஸ் மற்றும் அஸார் மெஹ்மூத் இருவரும் பால் டேம்பரிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அஸார்மெஹ்மூத்துக்கு சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்துக்கான கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இரண்டாவது முறையாக பால் டேம்பரிங்கில் ஈடுபட்ட வக்கார் யூனிஸுக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஒரு ஆட்டத்துக்கு அவர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஏற்கெனவே கண்டியில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அவர் பால் டேம்பரிங் செய்திருந்தார்.
யு.என்.ஐ.