தமிழகத்தில் இன்று
யாழ்ப்பாணத்தில் மீண்டும் கடும் சண்டை மூண்டது
கொழும்பு:
சில வாரங்களாக அமைதி நிலவிய யாழ்பாணத்தில் மீண்டும் போர் மூண்டது.
யாழ்பாணத்தில் சிக்கியுள்ள ராணுவ வீரர்களை விடுதலைப் புலிகள் சுற்றி வளைத்துள்ளனர். அவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
ஆனால், இதில் சில வாரங்களாக தொய்வு இருந்து வந்தது. இப்போது மீண்டும் கடும் போர் மூண்டுள்ளது. இத்தகவலை ராணுவம் உறுதிசெய்தது. புலிகளின் தாக்குதலையடுத்து பாதுகாப்புக்காக திருப்பித் தாக்கி வருவதாக ராணுவம் கூறுகிறது.
இந்த புதிய தாக்குதலில் இரு தரப்பிலும் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரம் தெரியவில்லை. முகமலை பகுதியில் தான்இப்போது இந்த சண்டை மூண்டுள்ளது. யாழ்பாணத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள இந்தப் பகுதியில் புலிகள் மீது ராணுவம் கடும்ஆர்ட்டிலரி தாக்குதல் நடத்தி வருவதாக அதிகாரிகள் கூறினர்.
செம்மணி அருகே ராணுவத்தினர் மீது புலிகள் மார்ட்டர் குண்டுகளை வீசி பதில் தாக்குதல் நடத்தினர்.