For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூரில் கிளை துவக்குகிறது நாஸ்டாக்

பெங்களூர்:

அமெரிக்காவின் முன்னணி பங்குச் சந்தையான நாஸ்டாக், பெங்களூரில் தனது கிளையைத் துவக்கத் திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூரில் தனது சேவையைத் துவக்க நாஸ்டாக் முடிவு செய்துள்ளது.

நாஸ்டாக்கில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என்பதால் பெங்களூரில் தனது சேவையைஏற்படுத்த நாஸ்டாக் கொள்கை அளவில் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

நாஸ்டாக் தலைவர்ஆல்பிரட் பெர்க்லி, புதிய கிளை தொடர்பாக கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் பேசியுள்ளார். சமீபத்தில் பெர்க்லி பெங்களூர்வந்திருந்தார். பெங்களூரில் உள்ளஅடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறித்து அவர் திருப்தி தெரிவித்திருந்தார்.

பெங்களூர் கிளை அலுவலகத்திற்கு கான்ஷியாம் தாஸ் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் எஸ்.எம்.கிருஷ்ணா,அமெரிக்கா செல்லவிருக்கிறார். அப்போது இதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படும்.

1971-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி நாஸ்டாக் உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் உள்ள 5500 நிறுவனங்கள் நாஸ்டாக்கில் உறுப்பினர்களாகஉள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X