தமிழகத்தில் இன்று
எண்ணெய் விலை உயர்வை தடுக்க வாழப்பாடி கூறும் 3 வழிகள்
மதுரை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வைத் தடுத்து நிறுத்த மூன்று வழிகள் உள்ளன என்று முன்னாள் பெட்ரோலியத்துறை மற்றும் இயற்கைஎரிவாயு அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் நிருபர்களிடம் இதுகுறித்துக் கூறியதாவது:
அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 19 டாலர்களாக இருந்தது. அது தற்போது 29 டாலர்களாக உயர்ந்துள்ளது. இது நமது நாட்டுக்குஇன்னொரு பெரிய சுமையாகும். நம் நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி 33 சதவீதமாக இருந்தது. தற்போது அது 22 சதவீதமாகக்குறைந்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் பற்றாக்குறையைச் சமாளிக்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமும், இந்தியன் ஆயில்கார்ப்பரேஷனும் ரஷ்யாவுடன் நீண்ட கால ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே ஈராக்கிலிருந்து இந்தியாவிற்கு நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த நிலையில்ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்ததால் அந்த ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை.
இந்தியாவும், பிறநாடுகளும் ஈராக் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை நீக்க ஐ.நா.விடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.அப்போதுதான் இந்தியாவின் எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்றார்.
யு.என்.ஐ.