தமிழகத்தில் இன்று
ராஜஸ்தான் ராணுவ கேப்டனை 8 நாட்களாக காணவில்லை
டெல்லி:
மகாராஷ்டிராவில் உள்ள அகமத் நகருக்கு ராணுவப் பயிற்சி பெறுவதற்காக சென்ற ராஜஸ்தான் ராணுவக்கேப்டனை ஜூலை 4 ம் தேதி முதல் 8 நாட்களாகக் காணவில்லை.
அவர் என்ன ஆனார்? எங்கு சென்றார் என்பது குறித்த எந்த விபரமும் தெரியவில்லை.
ஆஷிஸ் ஷா என்ற அந்த ராணுவக் கேப்டனுக்கு அகமத்நகரில் உள்ள பயிற்சி நிலையத்தில் நடக்கும் பயிற்சிமுகாமில் கலந்து கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்தப் பயிற்சி ஜூலை 10 ம் தேதிதொடங்கியது.
இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு முன் தனது சொந்த ஊரான நைனிடாலுக்கு ஆறு நாட்கள் விடுப்பில்செல்ல கேப்டன் ஷா திட்டமிட்டிருந்தார்.
இதற்கிடையே தனது மோட்டார்சைக்கிளை அகமத்நகருக்கு ரயிலில் கொண்டு செல்வதற்காக ஜூலை 3 ம் தேதிடெல்லி ரயில்நிலையத்தில் பதிவு செய்தார். அதற்குப் பின் அவர் காணவில்லை. இந்த விபரம் முதலில் யாருக்கும்தெரியவரவில்லை.
மோட்டார்சைக்கிளை பதிவு செய்தபின் அவர் ஆனந்த் விகார் பஸ் நிலையத்திற்குச் சென்றிருக்கலாம் என்றுபோலீசார் கருதினர். ஆனால் நைனிடாலில் உள்ள இவரது பெற்றோர்கள் இவரிடமிருந்து ஒரு தகவலும் வராததால்இவர் காணாமல் போன விபரம் குறித்து டெல்லிக்கு வந்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
யு.என்.ஐ.