தமிழகத்தில் இன்று
"கெமிக்கல் மருதாணி": மாணவிகள் மயக்கம்-4 பேர் கைது
கோவை:
ஈரோடு அருகே ரசாயணம் கலந்த மருதாணி பூசிய பள்ளி மாணவிகள் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் என்ற ஊரில் ஒரு பள்ளிக்கு அருகில் நான்கு பேர் மருதாணி என்ற பெயரில் ரசாயணம் கலந்த ஒரு பவுடரைபயன்படுத்தி, பள்ளிக் குழந்தைகளுக்கு கைகளில் பூசி வந்தனர்.
அப்போது அந்தப் பள்ளியைச் சேர்ந்த பல மாணவிகள் தங்கள் கைகளில் மருதாணி பூசினர். பின்னர் பள்ளியில் அமர்ந்து பாடங்களைக் கவனிக்கத் தொடங்கினர்.கைகளை நுகர்ந்து பார்த்த அந்த மாணவிகள் திடீர் என மயக்கமடைந்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், இவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். அதே சமயம், மருதாணி பூசிய 60 மாணவிகளும் மயக்கமடைந்தனர்.
இவர்களையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக மருதாணி என்ற பெயரில் ரசாயணப் பொருட்களை விற்ற மதேஸ்,ஆஞ்சனி, துரை, முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.