தமிழகத்தில் இன்று
காமராஜர் ஆட்சி அமைக்கும் முயற்சியில் மூப்பனார்
சென்னை:
காங்கிரசுடன் இணைந்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்று த.மா.கா.தலைவர்மூப்பனார் தெரிவித்தார்.
சென்னை வந்த காங்கிரஸ் மேலிடத் தலைவர் நட்வர்சிங், அனில் சாஸ்திரி ஆகியோர்மூப்பனாரை அவருடைய இல்லத்தில் சந்தித்து 45 நிமிடம் ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு மூப்பனார் அளித்த பேட்டி:
கேள்வி: காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பில் ஏதாவது அரசியல் முக்கியத்துவம்உண்டா?
பதில்: நட்வர்சிங்கும், அனில் சாஸ்திரியும் எனது நண்பர்கள். மரியாதை நிமித்தமாகஎன்னை சந்தித்துள்ளார். இதில் விசேஷம் எதுவும் இல்லை.
கேள்வி: விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் வைகோ, ராமதாசை ஜெயலலிதாகடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளாரே?
பதில்: வைகோவும், ராமதாசும் புலிகளை கடுமையாக தானே ஆதரிக்கிறார்கள்.
கேள்வி: ம.தி.மு.க., பா.ம.க. வை தடை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதாகூறியுள்ளாரே?
பதில்: முதலில் இந்த இரு கட்சிகளும் தங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவேண்டும். அதற்குப் பிறகுதான் அடுத்த கட்டத்திறகு போக வேண்டும்.ஆரம்பத்திலேயே தடை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு போகக்கூடாது.ஆனால்,ராமதாசும் வைகோவும் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள் என்பதில்எனக்கு நம்பிக்கை இல்லை.
கேள்வி: உங்கள் தலைமையில் மூன்றாவது அணி அமைகிறதாமே?
பதில்: ஆகட்டும் பார்க்கலாம்.
கேள்வி: காமராஜர் ஆட்சி அமைக்கும் முடிவு எந்த நிலையில் உள்ளது?
பதில்: அந்த முயற்சி தொடர்கிறது. காங்கிரசுடன் இணைந்து 33 ஆண்டுகளுக்கு பிறகுகாமராஜர் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளேன். என்ன நடக்கிறது என்றுபார்ப்போம் என்றார் மூப்பனார்.