For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

வந்த இடத்தில் "கை வைத்த இலங்கை அகதிகள் கைது

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்தில் நெடுஞ்சாலைத் துறை குடோனில் வெடி பொருட்கள் திருடிய இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டனர்.

ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான குடோன் உள்ளது. சமீபத்தில் இங்கு 270 டெட்டனேட்டர்கள்,செம்புக்கம்பிகள், மற்றும் சில கருவிகள் திருட்டுப் போயின.

இதையடுத்து வியாழக்கிழமை மண்டபத்தைச் சுற்றிப் போலீசார் ரோந்து சுற்றி வந்த போது, நான்கு பேர் சந்தேகப்படும் விதத்தில் நின்றுகொண்டிருந்தனர்.

இவர்களிடம் விசாரணை நடத்திய போது இவர்கள் இலங்கை அகதிகள் என்று தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் நெடுஞ்சாலைத்துறைகுடோனில் திருடியதை நால்வரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X