தமிழகத்தில் இன்று
800 மில்லியன் ஆண்டு பழமையான 500 டினோசர் முட்டைகள் மீட்பு
பீஜிங் (சீனா):
மத்திய சீனாவில் மலைப் பகுதியில் புதைந்து கிடந்த டினோசர் முட்டைகளை எடுத்தவிற்ற கும்பலிடமிருந்து விற்கப்படாமல் இருந்த 500 முட்டைகளை போலீஸார்கைப்பற்றினர்.
பீஜிங்கிலிருந்து வெளியாகும் யூத் டெய்லி என்ற பத்திரிக்கையில் இந்த செய்திவெளியாகியுள்ளது.
இந்தக் கும்பல் இதுவரை 1500 டினோசர் முட்டைகளை சட்டத்திற்கு புறம்பாகவிற்றிருக்கலாம் என்று தெரிகிறது. ஹூபாய் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகள்கிங்லாங் மலைப் பகுதியில், 4.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மண்ணைத்தோண்டியபோது, டினோசர் முட்டைகள் கிடைத்தன.
இந்த முட்டைகளை 10 முதல் 30 யென் வரை (1.2 முதல் 3.6 டாலர்) விற்றுள்ளனர். ஹிவெய்ஜுனி என்பவர் கடந்த ஒரு வருடமாக இதுபோல முட்டைகளை விற்றுவந்துள்ளார். மொத்தம் 1500 முட்டைகளை 100 யென்னுக்கு (12 டாலர்) விற்பனைசெய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக 36 வயதுடைய டயர் தொழிற்சாலை ஊழியர் ஒருவரைகடந்த ஜுன் மாதம் போலீஸார் கைது செய்தனர்.
ஜூன் 12-ம் தேதி நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி கண்டுபிடிக்கப்பட்ட 500முட்டைகளில் 493 முட்டைகள் மட்டுமே உண்மையான டினோசர் முட்டைகள்.இத்துடன் 403 பழம்பொருட்களும் மீட்கப்பட்டன.
இப்போது கிடைத்துள்ள 500 டினோசர் முட்டைகளும் 60 முதல் 800 மில்லியன்வருடங்கள் பழமை வாய்ந்தது என கருதப்படுகிறது.
யு.என்.ஐ.