தமிழகத்தில் இன்று
நியூசி. விமானிகளை விடுவித்தனர் பிஜி புரட்சிக்காரர்கள்
சுவா:
பினைக் கைதிகளாக பிடித்துச் சென்ற இரண்டு நியூசிலாந்து நாட்டு விமானிகளை பிஜி புரட்சிக்காரர்கள் விடுவித்துள்ளனர்.
புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் கைது செய்யப்பட்ட பின் பிஜி தீவு முழுவதும் ஸ்பீட் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஏர் பிஜி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு நியூசிலாந்து விமானிகளை புரட்சிக்காரர்கள் பிடித்துச் சென்றனர்.அவர்கள் நைபல்பலே கிராமத்தில்அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை விடுவிப்பது குறித்து கிராமத் தலைவர், புரட்சிக்காரர்களிடம் பேச்சு நடத்தினார். இதையடுத்து இரண்டு விமானிகளும் விடுவிக்கப்பட்டனர்.
ராணுவ அதிகாரி மேஜர் ஹோவர்ட் பொலிடினி இத்தகவலைத் தெரிவித்தார். இரண்டு விமானிகளும், வனுவா லெவு தீவிலுள்ள சவுசவு விமானநிலையத்திலிருந்து பிடித்துச் செல்லப்பட்டனர்.