For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
3 வருடங்களாக சொத்துக் கணக்குக் காட்டாத முதல்வர் கருணாநிதி
டெல்லி:
கடந்த மூன்று வருடங்களாக தனது சொத்துக் கணக்கை முதல்வர் கருணாநிதி சமர்ப்பிக்கவில்லை என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் தனஞ்செய குமார்தெரிவித்தார்.
மக்களவையில் வெள்ளிக்கிழமை நடந்த கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் பி.எச். பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:
தமிழக முதல்வர் கருணாநிதி கடைசியாக 1997-98-ம் ஆண்டுக்கான தனது சொத்துக் கணக்கைத்தான் சமர்ப்பித்தார். அவர் சமர்ப்பித்த கணக்கையும்,வருமானத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது எந்த வித்தியாசமும் இல்லை.
ஆனால், 1997-98-ம் ஆண்டுக்குப் பிறகு சொத்துக் கணக்கை கருணாநிதி சமர்ப்பிக்கவில்லை. கருணாநிதியின் சொத்துக் கணக்கு பற்றி எந்த விசாரணையும்நடைபெறவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் தனஞ்செய குமார்.
யு.என்.ஐ.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Friday, July 28, 2000, 5:30 [IST]