For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கதேசத்தில் கடும் புயல்: ஆயிரக்கணக்கானவர்கள் வீடிழப்பு

By Staff
Google Oneindia Tamil News

டாக்கா:

வங்கதேசத்தில் வீசிய கடுமையான புயலால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளைஇழந்துள்ளனர்.

வங்கதேசத்தின் தெற்குக் கடலோரப் பகுதியில் வெள்ளிக்கிழமை கடுமையான புயல்வீசியது. இதனால், பல நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்துவிட்டனர்.

லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கடலுக்குள்மீன்பிடிக்கச் சென்ற 60 மீனவர்களைக் காணவில்லை.

வங்கக் கடலில் வங்கதேசக் கடலோரம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்உருவாகியுள்ளது. இதனால், அடுத்த சில நாட்களுக்கு புயற் காற்றுடன் கூடிய பலத்தமழை பெய்யும் என்று டாக்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் முழு வீச்சில்மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்கள்பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X