மகனை நரபலி கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் பாராத் குமார் மேஹ்ரா என்பவர் கடவுளுக்குபலியாக தனது மகனை நர பலி கொடுத்ததால் அவருக்கு ஆயுள் தண்டனைவழங்க்கப்பட்டது.
ராாஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தின் கோடாடி கிராமத்தில் வசிப்பவர்பாரத்குமார் மேஹ்ரா. இவர் மந்திர, தந்திரங்கள் மூலமாகவும், பில்லி சூனியத்தின்மூலமாகவும் பெரும் பொருள் ஈட்ட நினைத்து, அதற்க ஈடாத கடவுளுக்கு தனதுமகன்களான தினேஷ் (7), ராஜு (14) என்ற இருவரையும் நர பலி கொடுக்க முடிவுசெய்தார்.
அதன்படி தனது இளைய மகனின் கழுத்தில் வெட்டினார். இதில், திணேஷ் அந்தஇடத்திலேயே இறந்தான். இன்னொரு மகனான ராஜுவையும் மேஹ்ரா வெட்டினார்.ஆனால் ராஜு பலத்த காயங்களுடன் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து போலீசிடம்தெரிவித்தான்.
இந்த நிலையில், மேஹர் தானும் தற்கொலை செய்ய முயன்று கத்திரிக் கோலால் குத்திக்கொண்டுள்ளார். ஆனால் முடியவில்லை.
போலீஸார், இறந்து போன சிறுவன் தினேஷின் உடலை மீட்டனர். பலத்த காயமடைந்தசிறுவன் ராஜு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான் தற்கொலைக்கு முயற்சி செய்துதன்னைத் தானே காயப்படுத்திக் கொண்ட மேஹ்ராவும் சிகிச்சை பெற்று வருகிறார்.
கணவர் மேஹ்ராவின் செயல் குறித்து நீதிமன்றத்தில் அவரது மனைவி கைலாஷ் பாய்கூறுகையில், தனது கணவர் தன்னைக் காண கடவுள்கள் வந்ததாகவும், இதையடுத்துஇந்தக் கொடூர செயலில் ஈடுபட்டதாகவும் கூறினார்.
மேஹ்ரா பயன்படுத்திய மந்திரங்கள் எழுதப்பட்ட சிகப்புக் கலர் துணி, திரிசூலம்,குங்குமம், காவிக்கலர் துணி, சில குறியீடுகள் மற்றும் பசுமாடின் சிறுநீரும்ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
ஐ,.ஏ.என்.,எஸ்.