தெரேசாவுக்கு பாரத ரத்னா கொடுக்கக் கோரிக்கை
கல்கத்தா:
அன்னை தெரேசாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கிக் கெளரவிக்க வேண்டும் என்றுமத்திய அரசுக்கு இரண்டு கிறிஸ்தவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடந்த தெரேசாவின் நினைவு தினத்தில் கலந்துகொண்ட பாங்கிய கிறிஸ்டிய பரிசேவா மற்றும் அகில இந்திய அமைதிக் கவுன்சில்ஆகிய இரு கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகளும் இக்கோரிக்கையை விடுத்தனர்.
பரிசேவா அமைப்பின் செயலாளர்ஹெராட் முல்லிக் கூறுகையில், 1949-ம் ஆண்டுஇந்தியாவில் மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ் என்ற தொண்டு நிறுவனத்தை தெரேசாதுவக்கினார். தனது வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காக வாழ்ந்தார்.1979-ல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
தெரேசாவுக்கு பாரத ரத்னா கொடுப்பது சரியான முடிவாக இருக்கும். தெரேசாவின்பணிகளை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். அவர் செய்த மிகப் பெரியசேவையை சிறிய அளவில் அங்கீகரிக்கும் விதமாக இந்த பாரத ரத்னா அமையும்என்றார்.
1929-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தவர் தெரேசா. தற்போது அவருக்குப் புனிதர்பட்டம் கொடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.