ரூ. 491 கோடியில் கூவத்தைத் தூய்மையாக்கத் திட்டம்
சென்னை:
சென்னையின் "நறுமணம் மிக்க நதியான கூவத்தை தூய்மையாக்க ரூ. 491 கோடி மதிப்பில் திட்டம்தீட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கூவம், பக்கிங்காம்கால்வாய், ஒட்டேரி கால்வாய் மற்றும் மாம்பலம் கால்வாய்களில் நகரின் கழிவு நீரால் ஏற்படும் மாசுவைக்கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ரூ. 491 கோடிஅனுமதித்துள்ளது.
இந்தத் திட்டம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும். திட்ட மதிப்பீட்டின் முழுத் தொகையையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.
சென்னை நகரில் உள்ள கூவம், அடையாறு மற்றும் நான்கு கால்வாய்களில் நகரின் கழிவு நீர்தூய்மைப்படுத்தப்படாமல் கலப்பதால் இந்த நீர்வழிகள் மிகவும் மாசுபடுத்தப்பட்டுள்ளன.
எனவே இந்த நீர் வழிகளின் தூய்மையை பாதுகாக்கவும் பல லட்சக்கணக்கான மக்களின் சுகாதார வாழ்வுக்கேற்றசுற்றுச்சூழலை உருவாக்கவும், இவற்றில் கழிவு நீர் கலக்காமல் தடுப்பதற்கான இத்திட்டத்தை மத்திய அரசு தேசியநதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொண்டுள்ளது. என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் டி.ஆர்.பாலு.