For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனிடம் செல்ல தீவிரவாதி மணிகண்டன் விருப்பம்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

வீரப்பனிடம் செல்ல தயாராக இருப்பதாக தமிழ்த் தீவிரவாதி மணிகண்டன் கூறியுள்ளார்.

நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமெனில் தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழ் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும்என்று வீரப்பன் நிபந்தனை விதித்துள்ளான். வீரப்பன் விடுவிக்கக் கோரும் 5 தீவிரவாதிகளில் மணிகண்டன் என்பவனும் ஒருவன்.

வீரப்பனின் நிபந்தனையை ஏற்று மணிகண்டன் உள்பட 5 தமிழ் தீவிரவாதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. ஒரு வழக்கு தொடர்பாகநீதிமன்றத்தில் ஆஜராவதற்காக புதுக்கோட்டைக்கு மணிகண்டன் கொண்டு வரப்பட்டார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன், வீரப்பனின்கோரிக்கைகளை இருமாநில அரசுகளும் நிறைவேற்றுவதாக இருந்தால், நாங்கள் எங்கு செல்லவும் தயாராக இருக்கிறோம். பொதுமக்களின்நலனிற்காகவே வீரப்பன் இந்தக் கோரிக்கையை வெளியிட்டுள்ளார் என்றார்.

முன்னதாக, மணிகண்டனை திருச்சி சிறையில் மாஜிஸ்ட்ரேட் சந்தித்துப் பேசினார். மணிகண்டனை விடுதலை செய்து மீண்டும் வீரப்பனிடம் ஒப்படைக்கக் கூடாதுஎன்று மணிகண்டனின் தந்தை அண்ணாமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வீரப்பனிடம் செல்ல மணிகண்டனுக்கு விருப்பம் உள்ளதா என்று அவரை சந்தித்து மாஜிஸ்ட்ரேட் ஒருவர் அறியவேண்டும். அது தொடர்பான அறிக்கையை செப்டம்பர் 8 ம் தேதி வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதன்படி, திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் சந்திரசேகரன், திருச்சி மத்தியச் சிறைக்குச் சென்று மணிகண்டனை நேரில் சந்தித்துப் பேசினார். ஆனால், மணிகண்டனின்விருப்பம் குறித்து தகவல்கள் எதையும் வெளியிட மறுத்து விட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X