ரூ. 1 லட்சம் கேட்டு பெண் அதிகாரி கடத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில், ரூ. 1 லட்சத்து 50,000 பணம் கேட்டு பெண் அதிகாரியை சிலர் கடத்திச் சென்றனர்.

சென்னை, ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி ராணி (48). தமிழக அரசின் வேளாண் துறையில், பணியாற்றி சமீபத்தில் வாலண்டரிரிடையர்மென்ட் பெற்றுக் கொண்டவர்.

சனிக்கிழமை ராணி வீட்டுக்கு அருகிலுள்ள வங்கிக்குச் சென்றார். அங்கு ரூ. 1 லட்சத்து .50,000 பணத்தை "டிரா செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்குத்திரும்பிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.

வங்கிக்குச் சென்ற ராணி நெடு நேரமாகியும் வீடு திரும்பாததால், வீட்டில் உள்ளவர்கள் குழப்பமடைந்து வங்கிக்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போதுபணத்துடன் ராணி சென்று வெகு நேரமாகி விட்டது எனத் தெரிய வந்தது.

இதையடுத்து ராணி வீட்டார் போலீஸில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில், சனிக்கிழமை ராணி வீட்டுக்கு ஒரு போன் வந்தது. ராணியின் மகள்கோகிலா போனை எடுத்துப் பேசினார். மறுமுனையில் இருந்தது ராணிதான்.

பதற்றமான குரலில் பேசிய ராணி, தன்னை சிலர் கடத்தி வைத்துள்ளதாகவும், தன்னிடமிருந்த ரூ. 1, 50,000 பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் மேலும்ரூ. 1,50,000 பணம் கொடுத்தால்தான் விடுவிப்பதாகவும் கூறுவதாக கூறியுள்ளார். இந்தத் தகவலை போலீசுக்குத் தெரியப்படுத்த வேண்டாம் எனவும்,பணத்தை தயார் செய்யுமாறும் அவர் கூறியுள்ளார். கடத்தல்காரர்களும் அதே போனில் கோகிலாவை மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து போலீஸார் கடத்தல்காரர்களை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+