ஊடலை மறந்த தோழர்கள் .. அதிமுக கூட்டத்தில் காங்.
சென்னை:
அ.தி.மு.க. நடத்திய போராட்ட ஆலோசனைக் கூட்டத்தில் த.மா.கா., காங்கிரஸ் உள்ளிட்டதோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் முடிவை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணி சார்பில்போராட்டம் நடத்த ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். போராட்டம் வருகிற 19ம் தேதிநடைபெறுகிறது.
போராட்ட ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை அ.திமு.க.திங்கள்கிழமை நடத்தியது. கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, த.மா.கா., கம்யூனிஸ்ட், தேசிய லீக்,தி.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டது.
அதோடு கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கும் ஜெயலலிதாஅழைப்பு அனுப்பினார். அதை ஏற்று பகையை மறந்து காங்கிரசும் இந்த கூட்டத்திற்கு வர ஒப்புக்கொண்டது.
திங்கள் கிழமை மாலை சென்னையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.ஜெயலலிதா வரவில்லை.
அவைத் தலைவர் காளிமுத்து தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் த.மா.கா. சார்பில் துணைத் தலைவர்விநாயகமூர்த்தி, காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி.ராஜேஸ்வரன், கவுரிசங்கர், இந்திய கம்யூனிஸ்ட்செயலாளர் நல்லகண்ணு, தேசிய லீக் தலைவர் அப்துல் லத்தீப் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications