ஜனாதிபதியிடம் மனு கொடுக்க ராஜ்குமார் ரசிகர்கள் முடிவு
பெங்களூர்:
விரைவில் நடிகர் ராஜ்குமாரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி, ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்து மனுக் கொடுக்கவுள்ளதாகராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சாரா. கோவிந்த் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பெங்களூர் கனிஷ்கா ஹோட்டலில் நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றக் கூட்டம் தலைவர் சாரா கோவிந்த் தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அவர்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தடா கைதிகளை விடுவிப்பது தொடர்பான வழக்கு 14 ம் தேதி விசாரணைக்கு வருகிறது. தீர்ப்புக்குப்பின் 15 ம் தேதி இதுகுறித்து ஆலோசிக்கப்படும்.
இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாட ராஜ்குமார் ரசிகர் மன்றம் சார்பில் வக்கீல் ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதற்கு அட்வகேட் ஜெனரல் அனுமதி வழங்கியுள்ளார்.
ராஜ்குமார் விடுவிப்பில் கர்நாடக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருகிறோம். தொடர்ந்து அமைதியைக் கடைபிடிக்குமாறுஅனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
ராஜ்குமாரை மீட்க, ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம். இதற்காக கர்நாட க எம்.பி.க்களுடன் விரைவில் டெல்லிசெல்வோம். ராஜ்குமார் ரசிகர் மன்றம் சார்பில் உள்துறை அமைச்சர் அத்வானிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி ரசிகர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார் சாரா.கோவிந்த்.