ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை .. இளங்கோவன்
சென்னை:
அ.தி.மு.கவிடம் ஆட்சியில் பங்கு கேட்கும் மூப்பனார் முடிவை நான் ஆதரிக்கிறேன் என்று தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னையில் திங்கள் கிழமை அவர் அளித்த பேட்டி:
அ.திமு.க விடுத்த அழைப்பை ஏற்று அக்கட்சி கூட்டியுள்ள கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பிரதிநதிகள்கலந்து கொள்வார்கள்.
ஜெயலலிதாவுக்கும் எனக்கும் இடையே எந்த பனிப்போரும் இல்லை. குறிப்பிட்ட ஒரு பிரச்சனையில்அவர் தனது கருத்தை சொன்னார். நான் அதற்கு பதில் சொன்னேன். கூட்டணிக்கும் அதற்கும் சம்பந்தம்இல்லை.
ஜெயலலிதாவை இப்போதைக்கு சந்திக்கும் அவசியம் இல்லை. அவசியம் ஏற்பட்டால் அதுபற்றியோசிக்கப்படும். ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் பெரியார் பிறந்த நாள்விழாவுக்கு இதுவரைஎனக்கு அழைப்பு வரவில்லை.
பெரியார் 1920 -ல் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். எனவே அவரது பிறந்த நாளை காங்கிரஸ்சார்பில் கொண்டாடவும், அதற்கு சோனியாவை அழைக்கவும் காங்கிரஸ் பிரமுகர்கள் விருப்பம்தெரிவித்துள்ளனர். அதுபற்றி கட்சி தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியில் பங்கு கேட்கும் மூப்பனர் முடிவு சரியானதே. அதை நான் முழுமையாக வரவேற்கிறேன்.கூட்டணி ஆட்சி என்பது தற்போது நடைமுறைக்கு வந்து விட்டது.தேர்தலில் வேலை செய்யும் கட்சிகள்ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று விரும்புவது நியாயமானதே.
காங்கிரசும் இதே கோரிக்கையை வலியுறுத்துமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்இளங்கோவன்.












Click it and Unblock the Notifications