திருமணம் காணச் சென்று பிணமான சிறுவர்கள்
கோவை:
திருமண விழாவிற்குச் சென்ற நான்கு சிறுவர்கள் நீர்ச் சுழலில் அடித்துச் செல்லப்பட்டனர்.
கோவை, பொள்ளாச்சி அருகே காளியாபுரம் உள்ளது. இந்த ஊரில் கணேசன் என்பவருக்கும் ஜோதிமணிஎன்பவருக்கும் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்தது.
இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இரண்டு நாட்களுக்கு முன்பே இவரது உறவினர்கள் சென்றனர். இவர்களில்கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஆறுச்சாமி, இவரது மனைவி, குழந்தைகள் கார்த்திகா (12), யசோதா (7)ஆகியோரும் சென்றனர்.
திருப்பூரிலிருந்து இவரது உறவினர் ஆறுமுகம், அவரது குழந்தை பிரபு (17) ஆகியோரும் காளியாபுரத்தில்விழாவிற்குச் சென்றனர்.
இந்நிலையில் காளியாபுரத்திற்கு அருகில் உள்ள தேவிபட்டிணத்தைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரது மகன்பாலசுப்ரமணியம், மூன்று சிறுவர்களுடன் சேர்ந்து, ஆற்றிற்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
ஆற்றில் ஒரு துணியைப் பயன்படுத்தி மீன் பிடிக்கத் தொடங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றின் நீர்ச்சுழல் ஒன்றில் சிக்கிக் கொண்டனர். இதில் நான்குபேரும் சிக்கித் தவித்தனர்.
தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கவே நான்கு பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். குழந்தைகள் செப்டம்பர் 9ம்தேதி இரவு வீடு திரும்பாததால், பெற்றோர்கள் தேடி அலைந்தனர்.
செப்டம்பர் 10 ம் தேதி காலையில் குழந்தைகள் நான்குபேரின் உடல்கள் காளியாபுரம் உப்பாறு பாலம் அருகேகண்டுபிடித்தனர். பின்னர் இவர்களது உடல்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.