மூட்டுவலி .. வாஜ்பாய்க்குத் தேவையில்லை ஆபரேஷன்
நியூயார்க்:
மூட்டுவலியால் அவதிப்பட்டு வரும் பிரதமர் வாஜ்பாயை நியூயார்க்கில் பிரபல மூட்டுவலி நிபுணர் சித்ரஞ்சித்ரனவாத் செவ்வாய்க்கிழமை பரிசோதனை செய்யவுள்ளார்.
பிரதமர் வாஜ்பாய் கடந்த 10 வருடங்களாக மூட்டுவலியால் அவதிப்பட்டு வருகிறார். சமீப காலமாக இதுஅதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் அவர் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், வாஜ்பாய்க்கு, மூட்டுவலி நிபுணர் சித்ரஞ்சித் ரனவாத் சிகிச்சை அளிக்கவுள்ளார். இவர் மவுன்ட்சினாய் மருத்துவமனையில் பணிபுரிறார். இந்த மருத்துவமனை உலகிலேயே மிகச்சிறந்த மருத்துவமனை என்றுபெயர் பெற்றதாகும். இருப்பினும், பிரதமருக்கு மூட்டுவலி தொடர்பாக அறுவை சிகிச்சை எதுவும் தேவையில்லைஎன்று கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை, சித்ரஞ்சித், பிரதமரைப் பரிசோதனை மட்டுமே செய்வார். அவருக்கு அறுவை சிகிச்சை எதுவும்நடக்காது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications